நீலகிரி: உதகை உள்ளிட்ட வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன். 16) ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் (120 மி.மீ. - 200 மி.மீ.) விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி