மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன். 16) ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் (120 மி.மீ. - 200 மி.மீ.) விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.