கரூர் அரசு மருத்துவமனையில், தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2021-இல் வெளியிட்ட சுட்டிக்காட்டி, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே உடற்கூராய்வு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.