திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறி பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெண்ணின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றுவதற்கு முற்பட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.