முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'அன்புச்சோலை' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திருச்சியில் இன்று (நவ.10) தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், முதியோருக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு சேவைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான முதியவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:சன்நியூஸ்