தொப்புளில் தினமும் இரவில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உடல் சூடு தணிந்து, சருமம் வறட்சியின்றி பொலிவடைவதுடன், உதடு வெடிப்பு பிரச்சனையும் குணமாகும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது வயிற்று வலி, செரிமானக் கோளாறுகளை நீக்கி, நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்ல தூக்கத்தைப் பெறவும் பெரிதும் உதவுகிறது.