ஈரான், அமெரிக்க போர் எதிரொலியால் எரிபொருள் நெருக்கடி நீடிக்கிறது. இந்தியாவில் நிலைமை சற்று சீராக இருந்தாலும் ஓரிரு இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காத நிலை உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வரப்போதவதாக சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தையொட்டி 'WAR LOCKDOWN NOTICE' என்ற பிடிஎப் கோப்பு பரப்பப்பட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த முக்கியமான நேரத்தில் மக்களை பீதியில் ஆழ்த்தும் இதுபோன்ற செயலை நெட்டிசன்கள் தவிர்ப்பது நல்லது.