தமிழ்நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' ரூ.1,000 நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டது. தவெக அரசு பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே கடந்த அரசின் திட்டத்தை தொடர்வதாக தெரிவித்தது. ஆனால், தவெக அளித்த வாக்குறுதிப்படி, விரைவில் ரூ.2,500 உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல், திட்டத்தின் பெயரை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என மாற்றப்படும் என கூறப்படுகிறது. தற்போது சுமார் 1.3 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.