திருச்செங்கோடு: டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், சிங்கிரிபட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய் (25). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். பின்னர் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சஞ்சயை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். 

இதில் படுகாயமடைந்த சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். தகவலின் பேரில் அங்கு வந்த வேலகவுண்டம்பாளையம் காவல் துறையினர், சஞ்சயின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சஞ்சயைக் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி