திருச்செங்கோடு மருத்துவ முகாம் - அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

திருச்செங்கோடு ஒன்றியம், இறையமங்களம் பகுதியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசின் நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் S. உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், ஒன்றிய கழக செயலாளர் திரு. வட்டூர் தங்கவேல் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. அபிராமி குணசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி