திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்ததையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்புகளை வழங்கினார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 15 வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 92,510 எண்ணிக்கையில் பயறு வகை, காய்கறி மற்றும் பழத்தொகுப்புகளை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி