மல்லசமுத்திரத்தில் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சேட்டு, நல்லாகவுண்டம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் பின்புறம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் லேசான காயம் என நினைத்து மாமுண்டி கலையரங்கத்தில் படுக்கவைத்துவிட்டு சென்ற நிலையில், சேட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி