திருச்செங்கோட்டில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி

நெசவாளர் காலனி பகுதி தைப்பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. நெசவாளர் காலனி பகுதியில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்கள் தூக்கிவந்த நிலையில், நிகழாண்டு முதல் முறையாக பெண்கள் கலந்துகொண்டு 47 கிலோ, 67 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 47 கிலோ கல்லை பெண்கள் பலர் சர்வசாதாரணமாக தூக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஐந்து பெண்கள் மட்டுமே 67 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்ற இளம்பெண் இரண்டு முறை 67 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கி முதல் பரிசை வென்றார்.

தொடர்புடைய செய்தி