எலச்சிபாளையம்: ரூ. 37 லட்சத்தில் புதிய சாலை

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் குருக்கபுரம் முதல் புள்ளாச்சிப்பட்டி வரை ரூ.37.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், செல்வராஜ், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி