இதனைத் தொடர்ந்து, கோயில்களில் கம்பம் நடப்பட்டு கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் நீராட்டி வழிபட்டனர். பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் வண்ண விளக்குகள் பொருத்தி மேளதாளத்துடன் பவனி வந்து ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்பக்குளத்தை தெப்பத்தேரானது மூன்று முறை வலம் வந்தது. மூன்று அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்