திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் மதுராசெந்தில் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.ஊா்வலமானது நான்குரத வீதியைச் சுற்றி நகராட்சி அலுவலகம் பகுதிக்கு சென்றது. அங்கு திருச்செங்கோடு நகராட்சி நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினா் நடேசன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி