சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அவருடைய திருவுருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் மருத்துவர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.