நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் (22) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மோகன்ராஜை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.