இன்று(செப்.8) மாலை ஊர்வலத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர். கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், சேந்தமங்கலம் நகரின் முக்கிய வீதி வழியாக சுற்றி கோயிலை வந்தடைந்தது. பின்னர், லட்சுமி நாராயணருக்கும், கருடாழ்வாருக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதணை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூலத் தட்டும், மங்களப் பொருள்களும் ஸ்ரீகருடாத்ரி பக்த குழு சார்பில் வழங்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி