போட்டி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்று பேசினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சுகந்திரதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயந்தி, சரவணன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.. அதிபர் டிரம்ப் இரங்கல்