திருச்செங்கோடு அருகே இலுப்புலி, மாரப்பம்பாளையம் பெரங்காடு பகுதியில் 12 குடும்பங்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், அங்கு வசிக்கும் 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து பாதையில் கொட்டப்பட்டுள்ள கற்கள், முள்களை அகற்ற உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனா். இதையடுத்து பொதுப்பாதையில் அனைவரும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.