நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலையில் தொடர் கனமழை பெய்தது. இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவுவதால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகுந்த சிரமத்துடன் பயணிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.