நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று (பிப்ரவரி 20) காலை விசாணம் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் நாமக்கல் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். காலை முதலே பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல இடங்களில் ஆய்வு செய்து தொடர்ந்து விசாணம் பகுதியில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.