நாமக்கல்: மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், வளர்த்த மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 

இதேபோல், மாடுகளை வாங்கிச்செல்ல கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விற்பனை சரிந்து, 3 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி