எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பௌத்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை முதல் மாலை வரை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆட்டுச் சந்தைக்கு நாவல்பட்டி, கஸ்தூரிபட்டி, முட்டாள்செட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். மேலும் வெளி மாநில வியாபாரிகளும் வந்தனர்.