மங்களபுரம்: திமுகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்த 15 பேர்

நாமக்கல் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில், சந்திரசேகர் புறம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சாந்தப்பா தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி பாமகவில் இணைந்தனர். இவர்களை மாவட்ட செயலாளர் ஓபி பொன்னுசாமி சால்வை அணிவித்து கட்சியில் வரவேற்றார். திமுக ஆட்சியில் தங்கள் பகுதியில் எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் தாங்கள் பாமகவில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி