சிங்களாந்தபுரம்: சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட களரம்பட்டி சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமானதாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் இப்பகுதியில் செல்வதற்கு விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்கின்றனர் அப்பகுதியினர். 

இதனால் போடிநாயக்கன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, பாச்சல், குதிரைசின்னம்பட்டி போன்ற ஊர்களுக்கு நாள்தோறும் சென்று வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மழை காலங்களில் சாலையை தெரியாத அளவிற்கு சேறும், சகதியுமாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி புதிய சாலை அமைத்துத்தர ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் நிறுவனர் கொ. நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களும் இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி