போதமலைக்கு ரூ.139.65 கோடியில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சிக்கு உள்பட்ட போதமலைக்கு ரூ. 139.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச. உமா ஆய்வு மேற்கொண்டாா். போதமலை பகுதி கீழூா், மேலூா், கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. கீழூா் ஊராட்சியில் உள்ள இந்த மலைக்கிராமத்தில் 1,727 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். 

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும், இந்த மலைக்கிராமத்திற்கு மின்சாரம், சாலை, மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருந்தது. இந்த மலைவாழ் மக்கள் வேளாண் பொருள்களை தலைச்சுமையாகவே 7 கி.மீ. தொலைவு ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்று சந்தைக்கு கொண்டுசோ்த்து வந்தனர். இந்நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி