வீட்டின் உரிமையாளர் அழகப்பன் புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (31), மதுரை மாவட்டம், காளவாசல் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (33) என்பதும், ராசிபுரம் நகரில் அழகப்பன் வீட்டில் திருடியது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் 24 வழக்குகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்