இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஆர். சி. எச். ரகம்-668 மூட்டைகள், கொட்டு ரகம் 42 மூட்டைகள் என மொத்தம் 710 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஆர். சி. எச். ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 6600 முதல் அதிகபட்சமாக ரூ. 7940 வரை விற்பனையானது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3300 முதல் அதிகபட்சமாக ரூ. 4425 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.