பிள்ளாநல்லூர்: ஓங்காளியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் திருக்கோவிலில் இன்று கோவில் பண்டிகையை முன்னிட்டு சுவாமி அழைத்தல், பூ மிதித்தல், தீர்த்தங்கடம் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் இன்று (மார்ச்7) காலை நடைபெற்றன. 

முதலில் தீர்த்தங்கட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அழைத்து வரப்பட்டார். பிறகு கோவில் அடைந்தவுடன் பக்தர்கள் பூ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி