நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நாமகிரிப்பேட்டை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஈஸ்வரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.