நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அத்தனூர் ஆயிபாளையம் பகுதியில் 2026 ஆம் ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அத்தனூர் பேரூர் தவெக கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.