நாமக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் நேற்று (ஏப்ரல் 8) காலை கீரம்பூர், புலவர் பாளையம் காலனி, பரமத்தி சாலை, கீரம்பூர் டோல்கேட், குஞ்சம் பாளையம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக சரி செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். அவருடன் கூட்டணி கட்சி உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.