21 வகையான திரவியங்களாலும், கலச அபிஷேகமும் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் 12 திருமுறைகள் ஓதலுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், ஆரத்தி, மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மட நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.