குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில், அனுமதி இன்றி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சுண்ணாம்பு கற்களை டிராக்டரில் ஏற்றி கடத்தியபோது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளை கண்டதும் டிராக்டர் ஓட்டுநர் தப்பி ஓடியதால், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டருக்கு வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.