குமாரபாளையம் ஒட்டன் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கவேல், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பின்புறம் ஏறும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி தங்கவேல் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.