அதேபோல் அருகில் இருந்த கண்ணாடி கடையின் உரிமையாளர் சரவணன் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 5 ஆயிரத்து 500-ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு பரமத்தியில் உள்ள இஸ்மாயின் என்பவரது மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்தும் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.