அதில், இறந்தவர் ஈரோடு, நாராயண வலசை சேர்ந்த சிவக்குமார் மனைவி சுதா (30) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவரது தம்பி மணிகண்டன் அக்காவிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்க, தனது மனைவி பவித்ரா, பவித்ராவின் தோழி கதீஜா, நண்பர் அசோக்குமார் ஆகியோருடன் சேர்ந்து சுதாவைக் கொலை செய்து குவாரியில் உள்ள குட்டையில் சடலத்தை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீசார், குமாரபாளையம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்