தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சார்பில் பணியின் போது எதிர்பாராதவிதமாக வீர மரணம் அடைந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஏப். 14 ல் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். ஏப். 14 முதல் ஏப். 20 வரை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம், , பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். தீயணைப்புத் துறை சார்பில், குமாரபாளையம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சிறப்பு தீயணைப்புதுறை அலுவலர் தண்டபாணி தலைமையில். அனைத்து அலுவலர்கள் மற்றும் வீரர்கள் பங்கேற்று
நீத்தார் நினைவு நாள் மலர் வளையம் வைத்து அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.