குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கல்வி சான்றிதழ்கள், வீடு பத்திரங்கள், ரொக்கப்பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள், நகை 9 பவுன், கணினி, லேப்டாப், மொபைல் போன், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட அனைத்து துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், பீரோ, 4 டேபிள், 4 நாற்காலிகள், டி. வி. எஸ். 50 டூவீலர் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதம் முன்புதான் ஓலை மேயப்பட்டு, அதன் மேல் தகர சீட் போடப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டப்பட்டது என உரிமையாளர் சரவணன் கூறினார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.