வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தில், காவியா (20) என்ற பெண் தனது 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தனது மாமியார் செந்தமிழ்செல்வி (ஆசிரியர்) மற்றும் மாமனார் பழனித்துறையின் (ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்) கொடுமையே காரணம் என காவியா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.