இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் 10 ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. கிராமங்களை காக்க வேண்டிய நிர்வாக அலுவலகத்திலேயே மின் இணைப்பு இல்லாமல் இப்படியொரு நிலை என்றால் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு எப்படிச் சென்றடையும் என அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குத்தாலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.