நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 01 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ. 3, 285 மதிப்பீட்டில் காதொலிக்கருவியினையும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையினையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.