வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா

வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மகப் பெருவிழாவை ஒட்டி கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத்திருவிழா நடைபெற்றது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தகுளத்தில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மனுடன் கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத்திருவிழா சென்றை மேளம், நாதஸ்வரம் ஆகிய மங்கள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. வேதாரண்யம் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவைக் காண சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கோடிக்கணக்கில் பங்கேற்று தெப்பத்திருவிழாவைக் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி