தேத்தாகுடி காமாட்சி அம்மன், காளியம்மன் ஆலய தீமிதி திருவிழா

தேத்தாகுடி காமாட்சி அம்மன், காளியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள காமாட்சி அம்மன் காளியம்மன் ஆலய ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

தீமிதி திருவிழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வண்ண வண்ண வாண வேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது. தொழிலதிபர்கள் எஸ். கே. ராமசாமி, எஸ். கே. சுந்தரவடிவேலு, பி. சண்முகம் உள்ளிட்டோர் திருவிழாவை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி