தலைஞாயிறு போலீசரகத்திற்கு உட்பட்ட மணக்குடி ஊராட்சி ஒன்றிய பழைய குடியிருப்பு பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த 70 இரும்பு கதவுகள் மற்றும் 140 இரும்பு ஜன்னல்கள் திருடு போனது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய கிடங்கு பொறுப்பாளர் தில்லைவாசன் கொடுத்த புகாரின் பேரில், திருட்டில் ஈடுபட்ட மணக்குடி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.