வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் இருந்து தண்ணீர் தேடி வெளியேறிய ஆண் புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் புஷ்பவனம் மீனவர் காலனிக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரணாலயத்தில் இருந்து வெளியேறும் மான்களை நாய்கள் கடித்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. வனத்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.