நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி, கடினல் வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு பல்வேறு காரணங்களால் உப்பு உற்பத்தி தாமதமாகத் தொடங்கிய நிலையில், இன்று வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.