தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ், கழக இளம்பேச்சாளர் அகிலா, ஊடகவியலாளர் ராஜ்கம்பீரன் அப்பாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பேசினர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் உதயம்வே முருகையன், என்.சதாசிவம், மகாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, பொதுக்குழு உறுப்பினர் எல்.எஸ்.இ பழனியப்பன், உமா செந்தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் நன்றி உரை ஆற்றினார்.