அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 04 நபர்களுக்கு தலா ரூ.14,000/- வீதம் ரூ.56,000/- மதிப்பீட்டில் திறன் பேசியையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,570/- மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.898/- மதிப்பீட்டில் தோள்பட்டை தாங்கியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.550/- மதிப்பீட்டில் முழங்கை தாங்கி என மொத்தம் 07 பயனாளிகளுக்கு ரூ.73,018/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. வ. பவணந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி